நம்மில்  பலருக்கு  உணவு  வகைகளைப்  பதப்படுத்தும்  முறை தெரிவதில்லை . குளிர்சாதனப்  பெட்டி  வாங்குவதில்  செலுத்தும் கவனத்தை , அதனால்  அடையும்  பலன்களிலும்  செலுத்தினோம் என்றால்  காய்கறிகள்  , பழங்கள்  நெடுநாளைக்கு  இருக்கும் .


1. ஐஸ்  ட்ரியில்  ஊற்றிப்  பதப்படுத்துவது .

2. டப்பாக்களில்  வைத்துப்  பதப்படுத்துவது .

3. என்ன  வகை  உணவைப்  பதப்படுத்துகிறோம்  என்று  பெயரிட்டு  வைப்பது .

4. பொலித்தீன்  பைகளில்  வைத்துப்  பதப்படுத்துவது .

5. ஃபாயில்  பேப்பர்  கொண்டு  மூடி  வைப்பது .

இன்னொரு  முக்கியமான  விடயம்  குறித்த  நேரத்துக்கு  காய்கறிகளைப்   சுடுதண்ணீரில்  போட்டு  வைப்பது .இப்படி  செய்வதால்  அதனுடைய    கிருமிகள்  அழிவதோடு வைட்டமின்  சத்தும்  பாதுகாக்கப்படுகிறது .    கூடவே  சுவையும் குறையாமல்  பாதுகாக்க  முடியும் .  

முக்கியமாக  நாம்  கவனிக்க  வேண்டியவை   ஒவ்வொரு  வகையான  காய்கறியை  குறிப்பிட்ட  நேரத்துக்கு   மட்டடுமே  சுடூரில்  போட்டு  எடுக்க  வேண்டும் .

 இப்பொது  நாம்  எப்படி   பல  வகையான  காய்கறிகளைப்  பதப்படுத்துவது    என்பதைப்  பார்ப்போம் .     

பீன்ஸ் :இளசாகப்  பார்த்து  வாங்கி  நுனிகளை  வெட்டி   எடுக்கவும்.பின்  இரண்டு  நிமிடம்  சுடுநீரில்  போட்டு       வடிகட்டி , ஆறவைத்து நன்கு   துடைத்து   உலர்த்தி   ஃப்ரிஸ்   செய்யவும்.

குடை  மிளகாய் :  நன்கு  கழுவி  விதைகள்  நீக்கி ,  துண்டுகளாக்கி மூன்று  நிமிடம்  சூடுநீரில்  கழுவி  எடுத்து , ஆறவைத்து  துடைத்து ஃப்ரிஸ்  செய்யவும் .

 


பச்சைப்  பட்டாணி :  நல்ல  பிஞ்சாகப்  பார்த்து  வாங்கி  தோல்  நீக்கிசுடுநீரில்  போட்டு  ஒரு  நிமிடம்  கழித்து ,  பின்  பொலித்தீன் பைகளில்  ஃப்ரிஸ்  செய்யவும் .




காலி  ஃப்ளவர் :  சிறு  சிறு  பூக்களாகப்  பிரித்தெடுத்து  , சிறிது  எலுமிச்சைச்  சாறு  சேர்த்து  , மூன்று  நிமிடம்  சுடுநீரில்  கழுவி வடிகட்டி ,  ஈரம்  போகத்   துடைத்து   ஃப்ரிஸ்  செய்யவும் .

 

வெந்தயக்கீரை:உப்பு  சேர்த்து  ஒரு  நிமிடம்   குளிர்ந்த நீரில் சுத்தம்  செய்யவும் .ஈரம்  போக  நன்றாகப்  பிழிந்து  எடுத்து ,பொலித்தீன்  பைகளில் போட்டு  ஃப்ரிஸ் செய்யவும். சுடுநீரில்  கழுவ   தேவையில்லை ..


 காளான் :  பட்டன்   காளான்களை                                     வெண்ணெயில ஒரு நிமிடம்  வதக்கி   ஒரு  டப்பாவில்  போட்டு    ஃப்ரிஸ்   செய்யவும் .     சுடுநீரில்  கழுவ  தேவையில்லை .



வெங்காயம் :  தோலுரித்து , சுடுநீரில்  கழுவி   பின்  பிளாஸ்ட்டிக்   டப்பாக்களில்  வைத்து  ஒரு  துணியில்  சுற்றி   ஃப்ரிஸ்  செய்யவும். 


தக்காளி :ஐந்து  நிமிடம்  சுடுநீரில்  போட்டு   கழுவி  எடுத்து . ஆறவைத்து,  பின்  பொலித்தீன்  பைகளில்  போட்டு    ஃப்ரிஸ்  செய்யவும் .

இந்த   முறையில்  நாம்  பல  வகையான  காய்கறிகளைப்  பதப்படுத்தி   மாதக்கணக்கில்  பயன்படுத்தலாம் .எந்த  நோய்களும்  நம்மை  தாக்காது .   ஆரோக்கியமாக  வாழலாம்.  


  






















 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *