எலுமிச்சை மற்றும் உப்பு கலந்து தயாரிக்கப்படும் பானம்
வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உருவாகுவதை
தூண்டுகிறது . இதனால் உணவு நன்கு செரிமானம்
அடைகிறது . இந்த பானம் உங்கள் உடலை நீரேற்றமாக
வைத்துக்கொள்வதனால் கீழ் வாதம் , சீறுநீரக கற்கள் ,
பித்தப்பைக்கற்கள் , மற்றும் பல்வேறு வகையான
மூட்டுவலிகள் வராமல் தடுக்கப்படுகின்றது . எலுமிச்சை
மற்றும் உப்பு இரண்டும் இதய ஆரோக்கியத்தை
மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது . எலுமிச்சையில்
வைட்டமின் சி நிறைந்துள்ளது , இது உப்பில் உள்ள சோடியம்
குளோரைடை சமன் செய்கிறது . எலுமிச்சையில் இருக்கு
வைட்டமின் சி உடலில் குளுட்டோதயான் உற்பத்திக்கு
வழிவகுக்கிறது .