அதாவது  சர்க்கரை  நோயாளிகளின்  உடல்  எப்பொழுதுமே 

கபம்  சார்ந்தும் , பித்தம்  சார்ந்தும்  அதிகமாக  இருக்கும் .

வில்வம்  குளிர்ச்சியை  தரக்கூடியது .  வில்வம்  உடம்பின் 

வெப்பத்தை  தடுக்க  கூடியது .  அதாவது  அதிகம்  குளிர்ச்சியை 

ஏற்படுத்தாது  வில்வம் . சாதாரணமான  குளிர்ச்சியை  கொடுக்க 

கூடியது  வில்வம் .  சர்க்கரை  நோயாளிகளுக்கு  பசியின்மை 

இருக்கும் , இது  ஒருவகையானது . சில  சர்க்கரை  நோயாளிகளுக்கு 

அதிகப்படியான  பசி  ஏற்படும்  இது  ஒருவகையான  பிரச்சினை .

பசியை  கூட்டக்கூடிய  தன்மை  இந்த  வில்வத்தில்  உண்டு .

நல்ல  செரிமானம்  செய்யக்கூடியது  இந்த  வில்வம் .  நமது 

உடலில்  சத்துக்கள்  முழுமையாக  உறிஞ்சி , தேவையான  

அளவு  ஜீரணம்  ஆனாலே , சர்க்கரை  நோயின்  அளவு 

கட்டுப்பாட்டுக்குள்  வந்துவிடும் . சர்க்கரை  நோய்  என்றாலே ,

ஒரு  வளர்சிதை  மாற்றம்  அதனால், அதனை சீர்  செய்யும் 

தன்மை  இந்த  வில்வத்தில்  காணப்படுகின்றது .  

இந்த  வில்வம்  மலம் இலக்கியாகவும்  செயல்படுகின்றது .

பொதுவாகவே  சர்க்கரை  நோயாளிகளுக்கு  மலர்ச்சிக்கல் 

இருக்கும் . ஒருவாரம்  மலர்ச்சிக்கல்  அல்லது  ஒரு  நாள் 

விட்டு  ஒருநாள் , அல்லது  இரண்டு  நாட்களுக்கு  ஒருமுறை 

மலர்ச்சிக்கல்  ஏற்படும் .  அதாவது  மலர்ச்சிக்கல்  இருந்தாலே 

சர்க்கரை  நோய்  கட்டுப்பாட்டுக்குள்  வராது .  அந்த  மலர்சிக்கலை 

கட்டுப்படுத்தக்கூடிய  தன்மை  இந்த  வில்வ இலைக்கு  உண்டு .

அதாவது , வில்வ இலை  மட்டும்  பயன்  தரக்கூடியது  அல்ல 

வில்வத்தின்  எல்லா பாகங்களும்  மருந்தாக  பயன்தரக்கூடியது .

குறிப்பாக  சர்க்கரை  நோயாளிகளுக்கு , கை  கால்  எரிச்சல் ,

மதமதப்பு , கை குத்தல் , கை  கால்  மறுத்துப்போதல்  இவ்வாறான 

பிரச்சினைகளுக்கு  வில்வ இலை  மிகசிறந்த  மருந்தாகும் .

அனைத்துவகையான  மேக  நோய்களையும்  கட்டுப்படுத்தும் .

தோல்  நோய்களில்  இருந்து , பெண்களுக்கு  ஏற்படும்  பிரச்சினைகளில்  வெள்ளைப்படுதல் , பெண்களுக்கு  ஏற்படும்  சினைப்பை  நீர்க்கட்டி (pcos )  முதல்  கொண்டு  சர்க்கரை  நோய்  வரை  எல்லா  மேக  நோய்களையும்  குணப்படுத்தக்கூடியது  வில்வம் .  வில்வத்தினுடைய  இளம்  தளிர்.

அதன்   பூ கண்களுக்கு  குளிர்ச்சியை  தரக்கூடியது . அதனுடைய 

பிஞ்சு  வயிற்று  புண்களை   ஆற்றகூடியதாக  இருக்கும் . அதன் 

பழம்  உடல்  வெப்பத்தை  கட்டுப்படுத்தி , பார்வை  தெளிவுற 

செய்கின்றது .  வில்வ  மரத்தின் ,அதில் வரும்  பால்  அதாவது  கம் , அது  ஆண்மை  தன்மையை  அதிகரிக்க  கூடியது , பெண்களின் 

கருமுட்டை  வளர்ச்சியை  சீர்  படுத்தக்கூடியதாகவும் இது இருக்கிறது

இவ்வளவு  நன்மை  தருகின்றது  வில்வம் .

அதைத்தவிர,  அறிவியல்  ஆராச்சியாளர்கள்  வில்வத்தை பற்றி கூறுகின்றார்கள்  கணையத்தில்  உள்ள  பீற்றா  செல்களை  நல்ல முறையில் வேலை  செய்து  அதை  புதுப்பிக்க உடைய  தன்மையுடையதாக  இருக்கும் .  சர்க்கரை  நோயாளிகளுக்கு   உடல் 

இளைப்பை  ஏற்படுத்துகின்றன . அதனை  தடுக்க  கூடிய  மிக  சிறந்த 

மூலிகைகளில்  ஒன்று  இந்த  வில்வம் . அதாவது  சர்க்கரை  நோய்க்கு 

எடுக்க  கூடிய  மாத்திரைகளின்  மூலம் , பக்கவிளைவுகளும்  அதிகமாக  காணப்படுகின்றது .  சர்க்கரை  நோய்  முற்றிய  நிலையில் 

ஏற்படக்கூடிய  ஒரு பக்கவிளைவின்  காரணமாக  சிறுநீரக  பாதிப்பு 

ஏற்படும் .   அதனை  சரி  செய்யக்கூடியது  வில்வம் .  கல் ஈரலின் 

செயல்திறனை  சீர்  படுத்தக்கூடிய  தன்மை  இதற்கு  உண்டு .

வில்வ  இலை காய்ந்தாலும்  அதன்  தன்மை  மாறாமல்  மருத்துவ 

குணத்துடன்  காணப்படும் .   தினமுமே  வில்வ  இலையை  பயன்படுத்தலாம் . சர்க்கரை  நோய்க்கு  மருந்து எடுத்து  கொண்டிருந்தாலும்  வில்வ  இலையை  பயன்படுத்தலாம் .

எவ்வாறு  எடுக்கலாம்  என்றால் , இரவில்  ஐந்து வில்வ  இலைகளை 

தண்ணீரில்  போட்டு  வைத்து  காலையில்  இலையை  மென்று 

சாப்பிட  வேண்டும் .  இது  கை கால்  மறுத்துப்போதல் போன்ற 

பிரச்சினைகளை  சரி  செய்யும் .  ஒரு  கைப்பிடி  வில்வ  இலைகளை 

தண்ணீரில்  போட்டு  கொதிக்க வைத்து   அத்துடன்  இரண்டு  மிளகு  சேர்த்து , 50ml  வந்தவுடன்  காலையில்  வெறும் வயிற்றில் குடிக்க  வேண்டும் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *