குழந்தை வயிற்றில் பூச்சி இருக்கிறது , என்று அறிந்ததும்
சிறிய வசம்பை சுட்டுப் பொடியாக்கி , சிறிது தேனில்
கலந்து குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக
கொடுக்க வேண்டும் . வயிற்றில் பூச்சி தொல்லை நீங்கும் .
சிறு குழந்தைகள் இனிப்பு வகைகளை அதிகம் உண்பார்கள் .
அதனை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள் உண்டாகும் .
இதற்கு எளிமையான வைத்தியம் உண்டு . தித்திப்பு
மாதுளையை முதல் நாள் குழந்தைக்கு சாப்பிட கொடுத்து
அடுத்த நாள் பாலில் சிறிது விளக்கெண்ணையை கலந்து
1 டீஸ்பூன் கொடுத்தால், வயிற்றில் உள்ள பூச்சிகள்
வெளியேறிவிடும் .
கொக்கிப்புழுக்கள் தொந்தரவில் இருந்து விடுபட துளசிச்
சாற்றுடன் , எலுமிச்சை சாற்றைக் கலந்து தினமும் குடித்து
வரவும் . தினமும் துளசி இலைகளை சிறு மென்று வரவும் .
இவ்வாறு செய்தால் புழுக்கள் வெளியேறும் .
கொட்டை பாக்கை நன்கு சந்தானம் போல இழைத்து
ஒரு டீஸ்பூன் பாலில் அல்லது நீரில் கலந்து
குழந்தைகளுக்கு கொடுக்க , குடல் பூச்சிகள்
அனைத்தும் மொத்தமாக வெளியேறி விடும் .