தேவையான பொருட்கள் :-
பூசணிக்காய்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1
பெரிய வெங்காயம் – 2 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 கீறியது
கறிவேப்பிலை – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தட்டிய இஞ்சி , பூண்டு – 1/2 தேக்கரண்டி
பாசிப்பருப்பு – 1/4 கப் , ஊறியது
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
தனியா தூள் – 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – நறுக்கியது
செய்முறை :-
1. பாசிப்பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும் .
2. பூசணிக்காயை தோல் மற்றும் விதை நீக்கி , துண்டுகளாக்கவும் .
3. கடாயில் எண்ணெய் ஊற்றி , கடுகு , உளுத்தம் பருப்பு , சீரகம் , காய்ந்த மிளகாய் சேர்க்கவும் .
4. கடுகு பொரிந்ததும் , இதில் பெரிய வெங்காயம் , பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும் .
5. அடுத்து இதில் ம-தூள் , மி-தூள் , உப்பு சேர்த்து ,
6. தட்டிய இஞ்சி , பூண்டு சேர்த்து பச்சை வாசணை போகும் வரை வதக்கவும் .
7. இதில் பூசணிக்காய் துண்டுகள் மற்றும் ஊறவைத்த பாசிப்பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும் .
8. இறுதியாக தனியா தூள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும் .
9. பூசணிக்காய் கூட்டு தயார் .