தினமும்  கேரட்  சாப்பிடுவதால் , உடலில்  உள்ள  தேவையற்ற 

கொழுப்புகள்  நீங்கும் .  குடல்  புண்  வராமல்  தடுக்கின்றது .

கேரட்  சாறுடன் , எலுமிச்சை  சாறு  கலந்தது  குடித்தால் 

பித்த  கோளாறு  நீங்கும் . அரைவாசி  வேகவைத்த  முட்டையுடன்,

கேரட்  மற்றும்  தேன்  கலந்து  சாப்பிட்டு  வந்தால்  ஆண்மை  சக்தி 

அதிகரிக்கும் .  வாரத்திற்கு  மூன்றுமுறை  கேரட்  சாப்பிட்டு  வந்தால் 

மாலைக்கண்  நோய்  வராமல்  தடுக்கலாம் .  கேரட்  சாப்பிடுவதன் 

மூலம்  முகப்பொலிவு  ஏற்படும் .  கருப்பு  நிறம்  உள்ளவர்கள் 

அடிக்கடி  கேரட்  ஜூஸ்  குடித்தால்  அவர்களின்  நிறம்  சிறிது 

மாறுவதுடன்  தோலின்  கடினத்  தன்மையும்  உலர்  தன்மையும் 

செம்மைப்படும் .  இரவு  உணவிற்குப்  பின்னர்  ஒரு  கேரட்டைக் 

கடித்து  உண்டால்  பல்  இடுக்குகளில்  ஒட்டிக்  கொண்டிருக்கும் 

உணவுகளை  வெளியேற்றுவதுடன்   பற்கள்  சொத்தை  ஆவதைத் 

தடுக்க  முடியும் .  

கண்  பார்வை  குறைபாடு  பிரச்சினை  இப்போதெல்லாம்  சிறிய 

குழந்தைகள்  முதல்  பெரியவர்கள்  வரை  அனைவரும்  சந்தித்து 

வருகின்றன .  கண்களின்  ஆரோக்கியத்தை  நாம்  கவனித்துக் 

கொள்வது  மிகவும்  அவசியம் .  பீற்றா கரோட்டின்  என்ற  சத்து 

குறைபாட்டால்  சிலருக்கு  கண்  மங்குதல் , கண்  புரை , கண்களில் 

நீர்  வடிதல் , கண்  சரியாக  தெரியாமல்  போதல்  போன்ற  

பிரச்சினைகள்  வருகிறது . கேரட்டை  பச்சையாக   

சாப்பிடுகின்றவர்களுக்கு  பீற்றகாரோட்டின்  சத்து  குறைபாடு 

இல்லாமல்  கண்  பார்வை  திறன்  அதிகரிக்கும் .  தினந்தோறும் 

கேரட்  ஜூஸ்  குடிப்பவர்களுக்கு  எலும்புகள்  வலுவடைந்து 

அதன்  உறுதிதன்மையை  அதிகரிக்கும் .  நோய்  எதிர்ப்பு 

சக்தி  அதிகரிக்கும் . தலைமுடி  உதிர்வதை  தடுக்கும் . வாய் 

துர்நாற்றம்  நீங்கும் . 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *