முடக்கு வாதம் நோய் மூட்டுகளை முடக்கி வைக்கிறது .
அதனால் இந்த கீரை முடக்கத்தான் கீரை என அழைக்கப்படுகின்றது .
முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும் ,
தாது உப்புகளும் காணப்படுகின்றது . இதை உணவில் தொடர்ந்து
சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலர்ச்சிக்கல் , மூல நோய்கள் ,
கரப்பான் , கரந்தி , பாத வாதம் போன்ற நோய்களும் குணமாகும் .
வாயு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உடையவர்கள் முடக்கத்தான்
கீரையை சாப்பிட்டு வருவதன் மூலமாக வாயு தொல்லை நீங்கும்.
மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கத்தான் கீரை இரசம் வைத்து
சாப்பிட்டு வந்தால் , உடலில் உள்ள வாயு கரைந்து வெளியேறி விடும் .
ஜலதோஷம் மற்றும் வேறு சில காரணங்களினால் சிலருக்கு
கடுமையான தலைவலி ஏற்படுகின்றது . இதனை போக்குவதற்கு
வெந்நீரில் முடக்கத்தான் இலைகளை நன்கு கசக்கி விட்டு
வெந்நீரில் சேர்த்து ஆவி பிடிப்பதன் மூலமாக தலைவலி
குணமாகும் .