இக்  காலத்தில்  இதயம்  சம்பந்தமான  நோய்களுக்கான

பிரச்சினைகள்  நிறைய  இருக்கின்றன .  அதாவது  வயதானவர்களின் 

இருந்து  சிறியவர்கள்  வரை  இதயம்  நோய்கள்  அதிகமாகி 

உள்ளது . இதயம்  நோய்கள்  வந்த பிறகு  கஷ்டப்படுவதை  விட 

அது  வராமல்  தடுப்பதற்கு  நாம்  மாதுளம் பழம்  சாப்பிட  வேண்டும் . 

இந்த  மாதுளம்  பழத்தை  ஒரு  நாளைக்கு  நாம்  மூன்று  பழம் 

சாப்பிட  வேண்டும் . அல்லது  ஒன்றாவது  சாப்பிட  வேண்டும் .

இதய  நோய்  வந்த  அறிகுறி  உள்ளவர்கள்   மூன்று  மாதுளம் பழம்  

சாப்பிட  வேண்டும் .  அதாவது  நமது  உடலுக்கு  தேவையான 

ஆன்டி ஒக்சிடண்ட்  கிடைக்கா  விட்டாலும்  இதய  நோய்கள் 

ஏற்படும் .

மாதுளம்  பழத்தில்  பொட்டாசியம்  நிறைந்து  காணப்படுகின்றது .

இந்த  பொட்டாசியம்  நமது  இதய  தசைகள்  சுருங்கி , விரிவதற்கு 

ஆரோக்கியமாக  இருப்பதற்கும்  மிகவும்  அவசியமாகின்றது .

100g  இருக்க கூடிய  மாதுளம் பழத்தில்  25mg  பொட்டாசியம் 

நிறைந்து  காணப்படுகின்றது . இந்த  பொட்டாசியம்  கிடைப்பதற்கு 

நாம்  ஒரு  நாளைக்கு  மூன்று  மாதுளைப்பழம்  சாப்பிட்டால் 

நமது  உடலுக்கு  ஒருநாளைக்கு  தேவையான  பொட்டாசியம் 

கிடைத்துவிடும் . நமது  உடலின்  தசைகளும்  ஆரோக்கியமாக 

காணப்படும் .  இதை  சமீபகாலமாக  அறிவியல்  ஆராச்சியாளர்கள் 

கூறுகின்றார்கள் . 

இதில்  ஆன்டி ஒக்சிடண்ட்  காணப்படுகின்றது , அத்தோடு  துவர்ப்பு 

சுவையும்  இதில்  காணப்படுகின்றது . இது  சிவப்பு  நிறத்தில் 

ஆனது , இதில்  டேனினும் , ஆந்தசின்ஸ்  இருப்பதால்  இது  

இரத்த  குழாய்களின்  உள்  இரத்தம்  படிவததை  தடுக்கின்றது .

எவ்வாறென்றால்  கெட்ட  கொலஸ்ட்ரோல்  படிவது  போல ,

பாசி  படிவது  போல் , இரத்த  குழாய்களில்  இரத்தம்  உறைவு  

காணப்படும் . இதனை  தடுப்பதற்கு  தினமும்  மாதுளைப்பழம் 

சாப்பிட்டு  வந்தால்  இதனை  தடுக்கலாம் . 

மாதுளைப்பழத்தை  தொடர்ந்து  சாப்பிடுவதால்  இரத்த  அழுத்தம் ,

மன அழுத்தம்   ஆகியவையும்  சரியாகும் . அதைத்தவிர  எந்த விதமான 

 உடல் உழைப்பும்  இன்றி  வேலை செய்பவர்கள் , அதாவது  அமர்ந்தே  

வேலை  செய்பவர்கள்  இவ்வாறானவர்களுக்கு 

சீக்கிரமாக  சர்க்கரை  நோய்  ஏற்பட்டுவிடும் .  சர்க்கரை  

அதிகமானால்  நரம்புகள்  செயலிழந்து  காணப்படும் . இதனால் 

தூக்கத்தில்  மாரடைப்பு  ஏற்பட்டாலும் , அவர்களுக்கு  வலி 

தெரியாமலே  இறந்து  விடுவார்கள் .  பொதுவாக  சர்க்கரை  

நோயாளிகளுக்கு  எந்த வகையான  பழங்களும்  சாப்பிட 

வேண்டாம்  என்று  கூறுவார்கள் , ஆனால்  நாட்டு  மாதுளை பழம் 

தினமுமே  சாப்பிடலாம் . 

அதைத்தவிர  மாதுளம் பழத்தில்  வைட்டமின் c  அதிகமாக 

 காணப்படுகின்றது . இதனால்  ஈமோகுளோபின்  அளவையும்  

அதிகப்படுத்தும் .  இது  நமது  உடலை   சுறுசுறுப்பாக  வைத்து 

கொள்வதற்கு  இந்த  வைட்டமின் c  தேவைப்படுகின்றது .

இந்த  மாதுளைப்பழத்தில்  மெக்னீசியம்  சத்துக்கள்   அதிகம் 

நிறைந்து  காணப்படுகின்றது .  தினமும்  மூன்று  மாதுளை 

பழம்  சாப்பிட்டால்  மாரடைப்பு  இன்றியும் , வேறு  நோய்களில் 

இருந்தும்  நம்மை  பாதுகாத்து  ஆரோக்கியமாக  வாழலாம் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *