பனிக்குட  நீர்  அதிகமாக  இருந்தால்  ஆபத்து . அளவுக்கு  அதிகமாக 

 இருந்தால்  பிரச்சினைதான் .  பனிக்குட  நீர்  அதிகமாக  இருந்தால் ,

 சாதரணமாக  5 மாதம்  என்றால் , கர்ப்பிணி  பெண்களின்  வயிறு  மிகவும் 

 பெரிதாக  இருக்கும் , 6,7 மாதம்  போல  தெரியும் .  வயிறு  வளர்ச்சி  ஒரு  மாத

  வித்தியாசம்  காணப்படும் .  நீர்  அதிகமாக  இருந்தால்  தாயிற்கு  சர்க்கரை

  நோய்  அல்லது  வேறு  எதாவது  பிரச்சினை  உள்ளதா  என  கவனிக்க 

 வேண்டும் . குழந்தையின்  வளர்ச்சியை  பார்க்கும்  பொழுது  குழந்தையின்

  உள்  உறுப்புகள்  சரி  வர  உள்ளதா  என  கண்டறிய  வேண்டும் . சில  நேரம் 

 குழந்தைகளின்  உணவு  குழாய்களில்  பிரச்சினை  ஏற்படலாம் .  உணவு

  குழாய் , மூச்சு  குழாய்களில்  ஒரு  சில  பிரச்சினைகள்  ஏற்படலாம் .  நீர்  சத்து

  அகிமானாலும்  சில  நேரம்  எந்த  விதமான  பிரச்சினைகளும்  இல்லாமலும் 

 இருக்கும் .

ஆனால் , பனிக்குடம்  உடையாமல்  கவனமாக  இருக்க  வேண்டும் . 

இல்லையென்றால்  தொப்புள் கொடி  ஆனது  கர்ப்பப்பையை  விட்டு  சீக்கிரம் 

 வெளிய  வர  பார்க்கும் . இவ்வாறு  ஏற்படாமல்  கவனமாக  இருக்க  வேண்டும் .

 அதிகப்படியான  ஓய்வு  எடுக்க  வேண்டும் .  தேவையற்ற  பாரமான 

 பொருட்களை  தூக்குவதை  தவிர்ப்பது  நல்லது .  படிகட்டுகளில்  ஏறி 

 இறங்குவதை  தவிர்ப்பது  நல்லது .  நீர்  சத்து  அதிகமாக  இருந்தால்

 முக்கியமாக  மருத்துவரிடம்  சென்று  தாயுடைய  ஆரோக்கியத்தையும் ,

 குழந்தையின்  வளர்ச்சியையும்  பரிசோதனை  செய்து  கொள்வது  நல்லது . 

பனிக்குட  நீர்  என்றால்  என்ன ?

ஒரு  பெண்  கர்ப்பத்தின்  போது , கர்ப்பப்பையில்  இருக்கும்  குழந்தையை 

 சுற்றி  ஒரு  நீர்  படலம்  இருக்கும் .  இந்த  நீர்படலம்  தான்  பனிக்குட  நீர் 

 அல்லது  அம்னோடிக்  திரவம்  என்று  அழைக்கப்படும் .  பனிக்குட  நீர் 

 நிறமற்றது .  வெள்ளையாகவோ  அல்லது  இளஞ்சிவப்பாகவோ  இருக்கலாம் . 

 பனிக்குட  நீர்  சீராக  இருந்தால்  தான்  குழந்தையின்  சுவாசம்  இயல்பாக 

 இருக்கும் . குழந்தை  பாதுகாப்பாகவும்  இருக்கும் .  ஒரு  சில  கர்ப்பிணிக்கு 

 பனிக்குட  நீர்  குறைவாகவோ  அல்லது  அதிகமாகவோ  இருக்கும் .

இவ்வாறு  ஏற்பட்டால்  குழந்தைக்கு  பாதிப்புகளை  ஏற்படுத்தும் . 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *