கர்ப்பமாக இருக்கும் பொழுது நீர் சத்து குறைவாக இருந்தால் நாம்
எவ்வாறு அதனை அதிகரிக்கலாம் செய்யலாம் . நீர் சத்து குறைவாக
இருக்கிறது என்று ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுதுதோ , அல்லது வயிறு
தேவையான அளவு வளர்ச்சி இல்லாமல் சிறியதாக இருக்கின்ற மாதிரி
இருந்தால் , நீர் சத்து குறைவாக இருக்கிறது என்று மருத்துவர்கள்
கூறுவார்கள் . நீர் சத்து குறைகிறது என்றால் முதல் விடயமாக
குழந்தைக்கு கிட்னி சரியாக வளர்கின்றதா ? இல்லை வேறு எதாவது ஒரு
சில பதிப்புகள் இருக்கின்றதா என மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்து
அறிவிப்பார்கள் . அடுத்து கர்ப்பிணி தாய்க்கு அதிகமாக வாந்தி
ஏற்படுத்தலும் நீர் சத்து குறைவதால் ஏற்படும் . அல்லது சாப்பிட
முடியாமல் இருப்பது , அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகள் உள்ளதா என
அறிந்துகொள்ள வேண்டும் .
வேறு ஏதும் காரணங்கள் இல்லை என்றால் , மருத்துவர்கள் நீர் சத்து
குறைவாக இருக்கிறது என கண்டறிது கூறுவார்கள் . கர்ப்பிணி
தாய்மார்கள் தண்ணீர் சரியாக அருந்துகின்றார்களா ? நன்றாக
சாப்பிடுகின்றார்களா? என வீட்டில் உள்ளவர்கள் கவனித்துக் கொள்ள
வேண்டும் .
1. கர்ப்பிணிப்பெண்கள் 3-4 லீற்றர் தண்ணீர் குடிக்கவேண்டும் .
2. நிறைய நீர்ச்சத்து உள்ள பழங்கள் சாப்பிட வேண்டும் .
3. புரதம் சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் .
உதாரணமாக :- முட்டை , பருப்பு , நட்ஸ்
4. கர்ப்பிணிப்பெண்கள் பகல் நேரத்தில் நித்திரை கொள்ளும் போது இடது
பக்கமாக சாய்ந்து நித்திரை கொள்ள வேண்டும் .
இதன் காரணம் என்ன என்றால் , இடது பக்கமாக நித்திரை கொள்ளும்
போது கர்ப்பப்பைக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் . இவ்வாறு
இரத்தம் ஓட்டம் அதிகரித்தால் குழந்தைக்கு செல்லும் இரத்தம்
அதிகமாகும் , இதனால் நீர்ச்சத்தும் அதிகமாகும் .
நீர்ச்சத்து என்றால் என்ன ? எவ்வாறு உருவாகிறது என்றால் ?
குழந்தையை சுத்தி இருக்கின்ற பனிக்குட நீர் வந்து எதனால் உருவாகிறது
என்றால் , குழந்தையுடன் எச்சில் , குழந்தையின் சிறுநீர் இதான் ,
குழந்தையை சுற்றி அம்மாவின் வயிற்றில் பனிக்குட நீராக வருகிறது .
நீர்ச்சத்து குறைகிறது என்றால் முதல் விடயம் குழந்தைக்கு செல்லும்
ஊட்டச்சத்து குறைகிறது என்று அர்த்தம் . அந்த நஞ்சு கொடி வழியாக
பில்ட்டர் ஆகி செல்கின்ற இரத்த ஓட்டம் சரியாக இருக்கிறதா என அறிந்து
கொள்ள வேண்டும் .
இதனை சரி செய்ய தண்ணீர் அதிகளவில் குடிக்க வேண்டும் . புரத
உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும் .