நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் . உடலில் நல்ல கொழுப்பை
அதிகரிக்கும் . புற்றுநோய் ஏற்படுவதைக் தடுக்கிறது . பார்வைத்
திறன் அதிகரிக்கிறது . மன அழுத்தத்தைக் குறைகிறது . கொய்யாவில்
பல வகைகள் உண்டு . அலகாபாத் , லக்னோ 46,
லக்னோ 49, பனாரஸ் , அர்காஅமுல்யா , அர்காமிருதுலா , நாட்டு
கொய்யா , சிவப்புக்கொய்யா ஆகியவைகள் உண்டு .
இதில் ஆரன்சு பழத்தை விட அதிகமாக 4 மடங்கு வைட்டமின் C உள்ளது .
இந்த கொய்யாப்பழத்தில் ,அன்னாசிப்பழத்தை விட 3 மடங்கு
புரோட்டினும் 4 மடங்கு பைபர் அதாவது நார்ச்சத்து காணப்படுகிறது .
தக்காளியை விட 2 மடங்கு லைகேபீன் இந்த
கொய்யாப்பழத்தில் காணப்படுகிறது . இந்த லக்கேபீன் என்பது
ஆன்டி ஆக்சிடன்டாக செயல்பட்டு நமது உடலில் உள்ள
சேதமடைந்த செல்களை சரிசெய்து குறைக்கக்கூடிய தன்மை
கொண்டுள்ளது .
100g கொய்யாப்பழத்தில் 228mg வைட்டமின் C காணப்படுகிறது .
இது ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான
வைட்டமின் C யை விட 3 மடங்கு கிடைக்கிறது . நோய் தடுப்பு
ஆற்றலை தரக்கூடியது . நோயைத் தரக்கூடிய பாக்டீரியாவை
அளித்து உடலில் வைட்டமின் C யை அதிகப்படுத்துவதால்
உடலில் நோய் தடுப்பு ஆற்றல் நமக்கு அதிகரிக்கும் .
தொடர்ந்து இந்த கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய்
ஏற்படுத்தும் செல்களை தடுக்கும் ஆற்றல் நமக்கு அதிகரிக்கும் .
குறிப்பாக மார்பக புற்றுநோய் செல்களை அளிக்கும் ஆற்றல்
கொண்டுள்ளது .
அடுத்து நீரிழிவு என்று சொல்லக்கூடிய சர்க்கரைநோய் .
சர்க்கரை வியாதியாளர்களுக்கு இந்த பழம் ஒரு வரப்பிரசாதம்
என்றே கூறலாம் . எந்த பழமும் சாப்பிட முடியாத சர்க்கரை
நோயாளிகள் இந்த கொய்யாப்பழத்தை சாப்பிட வைத்தியர்கள்
அனுமதிக்கிறார்கள் என்று கூறினால் , இந்த பழத்திற்கு திடீர்
என்று சர்க்கரையை உயர்த்துகின்ற தன்மை கிடையாது என்பதால் தான்
இந்த கொய்யாப்பழம் , சர்க்கரை நோயாளிகளுக்கு பொக்கிஷம் என்று
கூறுகின்றார்கள் .
மலச்சிக்கலை சரி செய்கின்றது . இதில் ஒரு நாளிற்கு தேவையான
பைபர் அதாவது நார்ச்சத்து ஒரு கொய்யாப் பழத்தில் கிடைத்து
விடுகிறது . இதில் இருக்கக் கூடிய விதைகள் நல்ல மலம் இலக்கியாக
நமக்கு செயல்படுகிறது . இதயத்தைப் மிகவும் பாதுகாப்பாக வைத்துக்
கொள்கின்றது . ஏனென்றால் , சோடியம் , பொட்டாசியம் இவை
அனைத்தையும் நமக்கு அதிகம் தருவதனால் , உயர்இரத்த அழுத்தத்தை
தடுத்து கெட்ட கொழுப்பைக் கரைத்து , நல்ல கொழுப்புகளை தந்து
இதயத்தைப் இது பாதுகாக்கின்றது .
கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய வைட்டமின் குறைப்பாடுகளை
இது நீக்குகின்றது . குறிப்பாக வைட்டமின் B9 போலிக்கல்
அதிகமாக இதில் இருப்பதனால் குழந்தைகளின் நரம்புமண்டல
வளர்ச்சிக்கு இது துணைப்புரிகிறது . இதில் வைட்டமின் A
அதிகமாக இருப்பதனால் கண் குறையையும் தடுக்கும் .
மன அழுத்தத்தை நீக்குகின்றது . ஏனெனில் , இதில் மெக்னீசியம்
அதிகமாக காணப்படுவதால் நீண்ட நேரம் உடல் உழைப்பு
செய்கின்றவர்கள் , நிறைய வேலை செய்கின்றவர்கள் , நிறைய
நேரம் பிரயாணம் செய்கின்றவர்கள் இதனை சாப்பிட்டால்
உடம்பிலுள்ள தசைகள் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும் .
மூளைக்கு மிகவும் நல்லது . ஏனெனில் , வைட்டமின் B 3, B 6
நியோசிக் போன்ற அனைத்தும் இதில் அதிகமாக இருப்பதால் ,
மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து , நினைவாற்றலை
தூண்டுகின்றது .
உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது . உடல் எடையை
அதிகரிக்கவும் உதவுகின்றது . இந்த கொய்யாப்பழம் சளி ,இருமல்
போன்றவற்றை நீக்கும் . ஏனெனில் , இதில் காணப்படக்கூடிய
வைட்டமின் C. வயதான தோற்றத்தை தள்ளிவைத்து இளமையுடன்
இருக்க வைக்கின்றது . அதற்கு காரணம் வைட்டமின் A , வைட்டமின் C ,
ஆன்டி ஆக்சிடன் , கரோட்டீன் ஆகியவைகள் இதில்
அதிகமாக இருப்பதனால் , முகச் சுருக்கங்களை நீக்கும் . இது நல்ல
நிறத்தை கொடுக்கும் . அதற்கு காரணம் வைட்டமின் K அழகுக்கு
மிகவும் துணைப்புரிகின்றது .
தைரைய்டை சம அளவாக வைத்துக் கொள்ளும் . ஏனெனில் ,
செம்பு இதில் அதிகமாக காணப்படுகின்றது . இரத்தக் அழுத்தத்தை
குறைக்கும் . கொழுப்பை உடம்பில் சேர விடாது .
நார்ச்சத்து அதிகம் இருப்பதனால் இவ்வளவு நன்மைகள் தருகிறது.
குறிப்பாக இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும் .
கொய்யாப்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க கூடாது .
ஏனென்றால் , தண்ணீர் குடித்தால் தொண்டையில் இலேசாக
வலி ஏற்படுத்தும் .